• Apr 02 2025

குட் பேட் அக்லியின் ஆர்வத்தைத் தூண்டும் ஜி.வி.பிரகாஷ்..! இப்படியொரு கடின உழைப்பா?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் சமீபத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இப்படத்தின் பல அம்சங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்ற நிலையில், தற்பொழுது இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.


தற்போது வெளியாகிய தகவல்களின் படி, இப்படத்துக்கான இசை வேலைகள் DSP செய்வதாக இருந்து இறுதி நேரத்திலேயே ஜி.வி. பிரகாஷுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. எனினும், அவர் மிகுந்த உழைப்பு மற்றும் உற்சாகத்துடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனைச் சிறப்பாக நிர்வாகித்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

ஜி.வி. பிரகாஷ் தமிழ்ச் சினிமாவில் இசை, நடிப்பு எனப் பல தளங்களில் வெற்றிகரமாகத் தன்னுடைய தடத்தை பதித்துள்ளார். இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் இசை அமைப்பாளராக இறுதி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு வந்ததாகக் கூறியுள்ளார். பொதுவாக இறுதி நேரத்தில் ஒரு படத்தின் இசையை அமைப்பது என்பது சவாலான விடயமாகும். எனினும் ஜி.வி.பிரகாஷ் எந்தவிதப் பதட்டமும் இல்லாது இசையமைப்பினை சிறப்பாக முடித்துள்ளார்.


மேலும் “இப்படத்தில் தயாரிப்பாளர்களை விட ஜி.வி.பிரகாஷ் தான் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார்,” என படக்குழுவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மட்டும் அல்ல, அஜித் ரசிகர்கள் இந்த இசையை எப்படி அனுபவிப்பார்கள்? என்பதையும் முன்னிலைப்படுத்திக் கொண்டு, பாடல்களை ஆழமாக கவனித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இத்திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் இசை வித்தியாசத்தை விரும்பும் ரசிகர்களுக்கான ஒரு சிறப்பான இசை அனுபவமாக அமையப் போகின்றது எனவும் கூறப்படுகின்றது. ஜி.வி பிரகாஷின் இசையை மேம்படுத்தும் ஆர்வம் மற்றும் அஜித்துக்காக அவர் செய்துள்ள கடின உழைப்பு என்பன ரசிகர்களிடம் படத்திற்கான வெற்றி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement