• Jul 06 2024

தலைகீழான பாக்கியா குடும்பம்.. ராதிகா கேட்ட கேள்வி! ஈஷ்வரிக்கு காத்திருக்கும் பூகம்பம்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் டைரக்டரிடம் கதை சொல்ல கிளம்ப, அந்த நேரத்தில் போலீஸ் வந்து ஈஸ்வரி மீது கமலா கம்ப்ளைன்ட் கொடுத்ததாகவும் அவரை அரெஸ்ட் பண்ண வந்ததாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றார்.

இதனால் எல்லாரும் அதிர்ச்சியாக நிற்க, எழில், செழியன் பேசுவதை போலீசார் கேட்கவே இல்லை. இறுதியாக ஈஸ்வரி நாளைக்கு வருவாங்க என்று சொன்னதும் நாளைக்கு நாம் திரும்பவும் வருவோம் என போலீசார் மிரட்டி செல்கின்றார்கள்.

இதை தொடர்ந்து செழியன் நடந்தவற்றை பாக்கியாவுக்கு சொல்ல, பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றப்படுகின்றார். ஈஸ்வரி, இனியா, ராமமூர்த்தியுடன் சிரித்து கதைப்பதை பார்த்து கவலைப்படுகின்றார். 


இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ராதிகாவிடம் கமலா நடந்தவற்றைச் சொல்ல, நீ ஏன் என்னை கேட்காமல் இப்படி எல்லாம் செய்தாய் என ராதிகா சத்தம் போட,  அந்த வீட்டில் உன்னை என்ன பாடுபடுத்தினாங்க என ராதிகாவுக்கு ஏத்தி விடுகிறார். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார் கமலா.

அதன் பின்பு பாக்கியா அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு காரில் வந்து கொண்டு இருக்கின்றார். இதன் போது ஈஸ்வரி சந்தோஷமாக இருப்பதை பார்த்து வீட்டிற்கு போனதும் அங்கு ஒரு பூகம்பமே இருக்குது இவங்க அப்படி தாங்க போறாங்களோ தெரியல என நினைத்துக் கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement