• May 08 2024

கதறி அழுத இனியா.. மூஞ்சிலையே குத்திடுவன்… கோபி செய்யப் போவது என்ன? இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இந்த சீரியலில் கோபியின் திருட்டுத்தனம் அனைத்தும் பாக்கியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் பாக்கியாவும் வீட்டை விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்….

ஈஸ்வரி அவருடைய கணவர், செழியன் ,ஜெனி என அனைவரும் அமர்ந்து பாக்கியா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.ஏன் இப்படி பாக்கியா வர மறுக்கிறாள்.எங்களுக்கும் மரியாதை கிடையாதா..என கேட்டுக் கொண்டு இருக்கும் போது இனியா படிக்கட்டில் வந்து அமர்ந்து உட்கார்ந்து அழுகிறாள்.

எல்லோரும் இனியாவை சமாதானப்படுத்த முயற்சி செய்ய இனியா அம்மா வரவே மாட்டாங்களா? எனக்கு இப்பவே அம்மாவ பாக்கணும் போல இருக்கு இன்னொரு முறை எனக்காக பேசுங்க தாத்தா நீங்க போய் பேசுங்க, பாட்டி என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செழியன் நானும் தாத்தாவும் போய் அம்மாவை கூட்டிட்டு வரோம். கண்டிப்பா அம்மாவோட தான் வருவேன் என செழியன் சத்தியம் செய்துவிட்டு செல்கிறார். இதன் பிறகு இருவரும் பாக்யாவிடம் சென்று இனியா அழுது கொண்டிருக்கிறார் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. சின்ன வயசு அவளுக்கு இதெல்லாம் என்ன புரியும்? ஏதாவது பொருளை கேட்டால் கடையில் இருந்து வாங்கி கொடுக்கலாம். அம்மா அப்பா எந்த கடையில் வாங்கி கொடுக்கிறது? நான் இப்போ உன்னை மருமகளா கூப்பிடல. உன் பிள்ளைகளுக்கு அம்மாவா நீ அந்த வீட்டுக்கு வரணும் என பேசிவிட்டு கிளம்பி விடுகிறார் கோபியின் அப்பா.

இனியாவை இங்க கூட்டிட்டு வருவோம் என செல்வி கூற . மூஞ்சிலையே குத்திடுவன் பார்த்துக்கோ செல்வி என பாக்கியா திட்டுறார்.எழிலோடும் பேசுகின்றார்.எப்படிடா முடியும் அவள் தாத்தா பாட்டி என எல்லோரோடும் இருக்கட்டும் என பாக்கியா கூறுகின்றார்.

இதனையடுத்து பாக்கியா இனியாவை நினைத்து வருத்தப்படுகிறார். நான் என்னுடைய நல்லதுக்கு நீ எடுத்த முடிவு அல்ல என் பிள்ளைங்க கஷ்டப்படுறாங்க என வருத்தப்படுறாங்க என பேச செல்வியும் எழிலும் பாக்கியாவை சமாதானம் செய்கின்றனர்.

மேலும் இப் பிரச்சனை உனக்கும் அப்பாவுக்கும் தான் அவர்தான் இனி இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன் நீ வீட்டுக்கு வா என மன்னிப்பு கேட்டு உன்னை கூப்பிட வேண்டும் என கூறுகிறார். செல்வியின் ஆமாம் தம்பி நீ சொல்றது தான் சரியென கூறுகிறார். பாக்கியாவும் அப்படியே யோசனையில் இருக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி பாக்யாவை சந்தித்து வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நீ வீட்டுக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள் கிளம்பி வா என பேசுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement