• May 07 2024

தற்கொலைக்கு முயலும் சிவகாமி; கடைசியில் சந்தியாவால் காத்திருந்த அதிர்ச்சி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் இரு சீரியல்கள் தான் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா.இந்த இரண்டு சீரியல்களும் இணைந்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

சந்தியா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கே அவர்களுக்கு கிடைக்கும் க்ளுவை வைத்து கண்ணம்மாவை தேடிச் செல்ல கண்ணம்மா கண்ணாடி துண்ட எடுத்து கயிறை அறுத்து அங்கிருந்து தப்பிக்க முடியல அவரை சுற்றி வளைத்த ரவுடிகள் கொலை செய்ய முடிவு செய்து கொள்ள முயற்சிக்க அந்த நேரத்தில் பாரதி சரவணன் மற்றும் சந்தியா என மூவரும் அவர்களை அடித்து விரட்டி கண்ணம்மாவை மீட்கின்றனர்.இதன் பிறகு பார்வதி பற்றி விசாரிக்க அவளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டதாக கண்ணம்மா சொல்கிறார்.

மேலும் இந்த பக்கம் வீட்டில் அர்ச்சனா உங்கள ஜெயில்ல போட போறாங்க என அழுது புலந்த இதனால் மணமடைந்து போன சிவகாமி ரூமுக்குள் சென்று கதவை மூடி தற்கொலைக்கு முயல்கிறார்.

இந்த நேரத்தில் பாஸ்கர் சரவணன் மச்சான் எல்லோரையும் வெளியே வர சொன்னாரு என சொல்ல அந்த நேரத்தில் சிவகாமி தேட அவள் ரூமுக்குள் இருப்பதை கண்டு கதவை உடைத்து காப்பாற்றுகின்றனர்.

இதன் பிறகு எல்லோரும் சாமியார் நடத்த உள்ள பூமி பூஜை நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். சாமியார் உங்களுக்கு என்னை பற்றியும் என்னுடைய சக்தியை பற்றியும் புரிந்திருக்கும் ஆனால் நான் யார் எங்கிருந்து வந்தேன் என்பது பற்றிய விஷயங்கள் உங்களுக்கு தெரியாது.

மேலும் அது குறித்த ஒரு சிறிய வீடியோ உங்களுக்காக என சொல்லி ஒரு வீடியோவை ஓட விடுகிறார். திடீரென அந்த வீடியோ நின்று விடுகிறது.இதன் பிறகு சாமியார் பார்வதி மற்றும் கண்ணம்மாவை கடத்திய இடத்திற்கு சென்று அவர்களை மிரட்டிய காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதைக் கண்டு சாமியார் அதிர்ச்சி அடைகிறார் ஊர் மக்கள் அனைவரும் கொந்தளிக்கின்றனர்.

பின்னர் சந்தியா கண்ணம்மா பாரதி மற்றும் சரவணன் என நான்கு பேரும் மேடைக்கு வந்து சாமியாரிடம் இருந்து நடந்த விஷயங்களை கூறுகின்றனர். ஊர் மக்களின் சிலர் அப்போதும் சந்தியா சொல்வதை நம்பாமல் சாமி கண்ணில் இருந்து ரத்தம் வந்ததே அதுக்கு என்ன பதில் என கேட்கின்றனர்.

பிறகு யார் தீபாரதனை காட்டினாலும் சாமி கண்ணில் இருந்து ரத்தம் வரும் என சொல்லி அதை நிரூபிக்கிறார். இதனால் ஊர் மக்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சாமியார் எதுவும் பேச முடியாமல் திகைத்துப் போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் எபிசோடு முடிவடைகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement