பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கூல் சுரேஷ். இவர் இதனைத் தொர்ந்து ஸ்ரீ, காக்க காக்க, மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபல்யமானவர்.
ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் ஏதாவது ஒரு கருத்துக்களை போட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.
இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதிலும் மாநாடு படத்தின் ரிலீஸின்போது தியேட்டர் முன்பு மீடியாவிடம் கூல் சுரேஷ் பேசிய பேச்சுகள் மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகவே சோசியல் மீடியாவில் பயங்கரமாக வளர்ந்திருந்தது.
ஒவ்வொரு படத்தின் போதும் இவர் விமர்சனங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திற்குத் திரையரங்கு வாசலிலேயே பல் துலக்கிக் கொண்டே கமெண்ட் செய்திருந்தார்.பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்து வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
இப்படி அடிக்கடி ஏதாவது செய்து ரசிகர்கள் கவனத்தை பெற்று வரும் இவர் சமீபத்தில் கவனத்தை பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார், அதில் பிக் பாஸில் நீங்கள் ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த அவர் ‘பிக் பாஸ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். சின்ன சின்ன பெண்களை அழைத்து வந்து அறையும் குறையுமாக ஆடை அணிவித்து ஆட வைக்கிறார்கள். அதை பார்க்க உள்ள போக சொல்கிறீர்களா ? நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்’ என்று ஆவேசமுடன் பேசி இருக்கிறார்.இவரின் இந்த கருத்து வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!