• Sep 19 2024

காலேஜ்ல 17 அரியர்ஸ் வைச்சிருந்தேன் பொண்ணுங்கள கேட்டு எழுதிதான் பாஸ் பண்ணினேன்- நடிகர் சிவகார்த்திகேயன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதலில் ஆங்கராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், இப்போது கோலிவுட் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாகிய டாக்டர் ,டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. , இது தவிர தனது 20 படத்தையும் நடித்து முடித்துள்ளார், இப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எஸ்.கே. 21 படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார் .

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன், தனது கல்லூரி வாழ்கை பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதாவது, அவர் காலேஜ் படிக்கும் போது 17 அரியர்ஸ் வைத்திருந்தாராம். அதன்பின், இப்படியே இருந்தா அவ்ளோ தான் வீட்ல அடிச்சிருவாங்க என்று யோசித்து, அவருடன் படித்த பொண்ணுங்க கிட்ட கேட்டு படித்து பாஸ் ஆனாராம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement