• Apr 28 2024

தெரியலையே எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லை- மாவீரன் பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

 சிவகார்த்திகேயன் தற்பொழுது 'மாவீரன்' படத்தில் இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர்.


இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு காது குத்தி மொட்டை போட சொந்த ஊரான திருவீழிமிழலைக்கு குடும்பத்துடன் வந்து மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த வீடியோ & புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தன.


மேலும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக் நடித்த 16 ஆகஸ்ட் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


 குறிப்பாக, "மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வந்ததே" என்ற கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "சிரித்துக் கொண்டே.. தெரியலையே. எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லை. ஏன் அந்த செய்தி வந்ததும் என்றும் தெரியவில்லை. மாவீரன் படத்தின் படப்பிடிப்பை அருமையாக முடித்து விட்டோம்." என சிவகார்த்திகேயன் பதில் அளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement