• May 02 2024

'ஹிந்தி சினிமாவில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை'- சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய மகேஷ்பாபு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது அயராத முயற்சியினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் மகேஷ்பாபு. இவர் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி ஸ்பைடர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அத்தோடு தற்பொழுது இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இதையொட்டி அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் ஹிந்தி சினிமாக்களில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு “நிறைய ஹிந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஹிந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

தெலுங்கு சினிமாவிலேயே எனக்கு நட்சத்திர அந்தஸ்தும், ரசிகர்களின் பேரன்பும் கிடைத்துள்ளது. அதைவிடுத்து இன்னொரு மொழியில் நடிப்பது பற்றி நினைப்பது கூட இல்லை. தெலுங்கிலேயே பெரிய படங்கள் பண்ணவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” எனக் கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement