• May 19 2024

எனக்கு பிடித்த நேரம் இது தான்- தனது சந்தோசத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜனிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா ,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பிரியப்போவதாக அறிவித்திருந்தனர்.

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு கடும் சோகத்தைக் கொடுத்தது. இருவரையும் சேர்த்து வைக்க பலரும் முயற்சி செய்து வந்த நிலையிலும் எதுவும் சாத்தியமாகவில்லை. விவாகரத்திற்குப் பிறகு இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டார். லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்கள், வீடியோக்கள், ஜாக்கிங் மற்றும் யோகா செய்யும் போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அதிகாலையிலே சைக்கிளிங் சென்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, முழு நாளில் எனக்கு பிடித்தமான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதயத்தை திருடாதே சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பினை நிறைவு செய்த சீரியல் குழு

சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதில் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் நவீன் மற்றும் ஹீமா பிந்து ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து இருந்தனர்.

This image has an empty alt attribute; its file name is fb63dff6-colours-tamilcinesamugam.jpg

Jeev Zala Yeda Pisa என்ற மராத்தி தொடரில் ரீமேக் தான் இந்த இதயத்தை திருடாதே தொடர்.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த தொடர் 2 பாகங்கள் வரை ஓடியுள்ளது. தற்போது இரண்டாவது பாகமும் முடிவுக்கு வந்துள்ளது,

அத்தோடு விரைவில் 3வது சீசன் தொடங்கும் என சீரியல் குழு தெரிவித்துள்ளார்கள். 2வது சீசனோடு நடிகை ஹீமா பிந்து தொடரில் இருந்து விலகுகிறார், இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்தது. தற்போது 2வது சீசன் இறுதி நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது.

கடைசி நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வி மிஸ் யூ டீம் என தங்களது சோகத்தை கமெண்ட்டா போட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:



Post Settings

Advertisement

Advertisement