• May 19 2024

மூர்த்தியை ஓடி வந்து கட்டிப்பிடித்த தம்பிகள்- உண்மையைப் போட்டுடைத்த தனத்தின் அண்ணி- பாண்டியன் ஸ்டோர்ஸ் எப்பிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது தனம் கர்ப்பமாக இருப்பதை மூர்த்தி தம்பிகளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இதனால் வெளியில் போயிருந்து தனியாக நின்று பேசி எப்படி சொல்லலாம் என்று நடித்துப் பார்க்கிறார். இதனைக் கண்ணன் பார்த்து விட்டு அண்ணா என்ன தனியாகப் பேசிட்டு நிற்கிறாரே என பயந்து போய் ஜுவா மற்றும் கதிரை அழைத்து வந்து காட்டுகின்றார்.


அப்போது மூர்த்தி தம்பிகளிடம் பேசுவது போல எல்லோரும் என்னைப் பாருங்கடா நான் இப்போ என்ன சொல்ல வாறன் தெரியுமா என்று சொல்ல வர தனம் வந்து தடுத்து விடுகின்றார். மூர்த்தி எல்லோரும் தன்னை வந்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றார். பின்னர் நான் நாடகம் நடிக்கிறேன் அது தான் நடித்துப் பார்க்கிறேன் என்று கூறி சமாளித்து விட்டு செல்கின்றார்.

இருந்தாலும் மூர்த்தி, தனத்தினுடைய நடவடிக்கை ஜுவாவுக்கும் கதிருக்கும் சந்தேகமாகவே இருக்கின்றது. தொடர்ந்து மூர்த்தி இருக்கும் போது ஜஸ்வர்யா என்ன மாமா இன்று கதை எல்லாம் கிடையாதா என்று கேட்க மூர்த்தி கதை எல்லாம் இல்லமா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அது சொல்ல முடியாமல் தான் தவிக்கிறேன் என்று சொல்ல அங்கு வரும் தனத்தின் அம்மா ,அண்ணா ,அண்ணி மூவரும் மூர்த்திக்கும் தனத்திற்கும் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.


இதனால் வீட்டில் இருக்கிறவங்க என்ன ஏது என்று புரியாமல் இருக்க தனத்தின் அண்ணி, தனம் உண்டாகி இருப்பதாக கூற எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர்.பின்னர் கதிர், ஜுவா, கண்ணன் எல்லோரும் மூர்த்தியை கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக இவர்கள் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement