• Apr 28 2024

சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருக்கு?.. ப்ரியா பவானி ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார்.

 தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார்.

 தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. 

ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2, ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பொம்மை உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். 

சினிமாவில் சம்பாதிப்பவர்கள் பெரும்பாலும் தனி தொழில் தொடங்குவது காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான். அந்த வகையில் அவர் லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது .

 இந்நிலையில் ரமலான் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர் தனது ஹோட்டலுக்கு சென்று அங்கு செய்த பிரியாணியை சாப்பிட்டார். அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொந்த ஹோட்டலில் செய்யப்பட்ட பிரியாணி எப்படி இருக்கிறது என்பது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

 இதுகுறித்து அவர் செய்திருக்கும் பதிவில், "எங்களது லியாம்ஸ் டைனர் ரெஸ்டாரண்ட்டில் ரமலானை கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் முன்னேறும் எங்களது இளம் டீமை நினைத்து பெருமையாக இருக்கீறது. அங்கு நான் சாப்பிட்ட பிரியாணி மற்றும் தால்ச்சாவின் ருசி என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. குறிப்பாக அங்கு கிடைக்கும்  பான் ஷேக் எப்போழுதும் என்னுடைய ஃபேவரைட் சியர்ஸ்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement