• Apr 28 2024

வாசலில் நின்று பெற்றோலுக்கு காசு கேட்பார், அதான் நல்லா இருக்காரு- வடிவேலு குறித்த உண்மையை உடைத்த பிரபலம்

stella / 4 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக விளங்குபவர் தான் நடிகர் வடிவேலு. பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.அதன்படி இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னனில் காட்சிப்படுத்தியிருந்தார். வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தாலும் அவரை சுற்றி சுமூகமான சூழல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் நடித்த பலரும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். 

 இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பும் வடிவேலு மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "வடிவேலு யாருக்கும் ஒரு உதவியும் செய்யமாட்டார். யாருடைய வீட்டுக்கு அவர் சென்றாலும் வீட்டு வாசலில் நின்று பெட்ரோலுக்கு 1500 ரூபாய் கொடுங்கள் என கேட்பார். அதனால்தான் அவர் நன்றாக இருக்கிறார்.


 ஆனால் நானோ பல உதவிகளை செய்திருக்கிறேன். அப்படி இருந்ததால்தான் இப்போது நான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். அவர் நன்றாக இருப்பதற்கு காரணமே யாருக்கும் ஒரு பைசாக்கூட தரமாட்டார் என்பதால்தான்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement