• May 20 2024

கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசி விட்டார்- ஜி.பி முத்துவைப் புகழ்ந்து தள்ளிய நடிகர் சேகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்பட்டு இரண்டு வாரங்கள் கழந்து விட்டன. நேற்றைய தினம் வீட்டிலிருந்து சாந்தி மாஸ்டர் வெளியேறினார். இது தவிர கடந்த சனிக்கிழமை ஜி.பி முத்து இந்த வீட்டிலிருந்து வெளியேறினார். காரணம் தனது பிள்ளைகளை விட்டு என்னால் இருக்க முடியாது என்றே கிளம்பி விட்டார்.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், பாஜக உறுப்பினர் எஸ்வி சேகர் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நீ சங்கியா என கேலி பேசப்பட்டவர் அவர், 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணத்தைவிட, தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசமே மேல் என ஒரு நல்ல குடும்பத்தலைவனாக நிரூபித்து, கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார் என்று கூறி இருக்கிறார். 


இப்படி இவர் கூறியிருப்பதற்கு காரணம், கடந்த வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருடைய ரசிகர்கள் அவருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.அப்போது அந்த ஒரு கடிதத்தில், தலைவரே நீங்கள் பிக் பாஸ் வீட்டில் சிங்கியா, சொங்கியா மங்கியா என்று கேள்வி கேட்டிருந்தார்கள். 

இதற்கு கமல்ஹாசன், ஒன்ன விட்டுட்டாங்கள்ள என்று கேட்டிருந்தார்கள். அஇப்படி கமல்ஹாசன் சொன்னது சங்கி என்பதை தான்  நெட்டிசன்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இருப்பினும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது வெள்ளந்தியான குணத்தினால் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement