• May 19 2024

அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்: நடிகர் பார்த்திபனே கூறிய விடயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக ரீச் கொடுத்த நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.

இவ்வாறு இருக்கையில் நடிகர் பார்த்திபன் இன்று குக் வித் கோமாளி ஷோவிற்கு வந்திருக்கிறார்.

மேலும் அவரது இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் அவர்சென்றிருக்கிறார். உடன் நடிகை பிரிகிடாவும் வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் படத்தை பற்றி பார்த்திபன் சில விஷயங்களை கூறி இருந்தார். ஒரு ஷாட்டில் மொத்த படத்தையும் non-linear ஆக எடுத்திருப்பதாக கூறினார்.

அப்போது பேசிய தொகுப்பாளர் ரக்ஷன் "அந்த படத்தில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக கூட சான்ஸ் கிடைக்காதா என ஆடிஷனுக்கு சென்றேன், அப்படி ஒரு படம் அது" என ரக்ஷன் தெரிவித்தார்.

அதை கேட்ட பார்த்திபன், "நீங்கள் தற்போது தனியாக படம் பண்றீங்கனு கேள்விப்பட்டேன். அடுத்த சிவகார்த்திகேயன் நீங்க தான்" என கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement