• May 09 2024

காதலிக்க சொல்லி அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார்- பரபரப்பு புகார் அளித்த நடிகை மஞ்சுவாரியார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பினால் தமிழில் அடுத்து என்ன படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் இவர் மலையாள நடிகரான திலீப்பை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் இவரை காணவில்லை என்றும், அவர் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

இதனால் மஞ்சு வாரியர் எங்கே? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் கொச்சி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் டைரக்டர் சனல்குமார் சசிதரன், தன்மீது அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் நேற்று எர்ணாகுளம் போலீசார், இயக்குனர் சனல்குமார் சசிதரனை கைது செய்தனர்.

அத்தோடு அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகாரில் சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ படத்தின் படபிடிப்பின் போதே அவர் என்னை காதலிப்பதாக கூறினார். அதனை நான் ஏற்க மறுத்தேன். அதன்பிறகும் அவர் என்னை காதலிப்பதாக கூறி தொலைபேசியில் பேசினார்.

அதனையும் நான் கண்டித்தேன். அதன்பின்பும் அவர் விடாமல் தன்னை காதலிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் மூலம் கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் அவரது பதிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தேன். அதன்பிறகும் அவர் என்னை தொந்தரவு செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement