• Apr 28 2024

பாடகி சின்மயின் இரட்டைக் குழந்தைகளையும் பார்த்திருக்கின்றீர்களா?- அவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே

stella / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரசிகர்களை, தன்னுடைய இனிமையான குரலால் வசீகரித்தவர் பிரபல பாடகி சின்மயி. 2002 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தின் முத்தமிட்டாள்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய, சிறு தெய்வம் தந்த பூவே பாடல், சின்மயியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.

இதை தொடர்ந்து, தற்போது சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடகி என்பதை தாண்டி, பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங்  பேசியும் வருகின்றார்.


மேலும் இவர் நடிகை சமந்தாவுடன் சிறந்த நட்புறவையும் பேணி வருகின்றார்.கடந்த 2014-ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது.


அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதையும் சின்மயி வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது தனது குழந்தைகளுக்கு மொட்டையடித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதற்குள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement