• May 19 2024

மாலினிக்காக பாக்கியாவைத் திட்டிய கோபி- செழியன் எடுத்த முக்கிய முடிவு- அழுது கதறிய ஜெனி- Baakiyalakshmi Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

மாலினி செழியனின் குழதையை மறைத்து வைத்ததால் எல்லோரும் குழந்தை எங்கே என்று தேடுகின்றனர். அப்போது மாலினி செல்வியிடம் குழந்தையை கொடுத்து விட்டேன் என்று சொல்ல செல்வி தன்னிடம் குழந்தையைத் தரவில்லை என்கின்றார்.பின்னர் மேலே இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றார்.


 அப்போது பாக்கியாவுககு கோவம் வர பாக்கியா மாலினியைத் திட்டி விடுகின்றார். எதுக்காக அடிக்கடி இங்கே வருகின்றாய். ஆபிஸ் வேலை என்றால் ஆபிஸ்லையே வச்சிருக்க வேண்டியது தானே, செழியன் இப்போ லீவுலதானே நிற்கிறான் மரியாதையா நீ இப்போ வீட்டை விட்டு போ எனத் துரத்தி விடுகின்றார்.

இதனால் மாலினியும் கோபித்துக் கொண்டு சென்று விடுகின்றார். தொடர்ந்து கோபியும் வீட்டில் இருக்கும் போது பாக்கியா ஜெனிக்கு யூஸ் கொண்டு வந்து கொடுக்கின்றார். அப்போது கோபி மாலினியைத் திட்டிய விஷயம் தப்பு என்று சொல்ல, பாக்கியா ஆபீஸ் வேலைய ஆபீஸ்ல வைச்சிருக்க வேணடிது தானே எல்லாரையும் நம்பி ஏமாந்தது போதும் என்று பதிலடி கொடுக்கின்றார்.


அப்போது கோபியும் இப்படி பண்ணினதால் செழியனோட வேலைக்கு தான் ஆபத்து என்று சொல்லித் திட்ட, பாக்கியாவும் பதிலுக்கு திட்ட ஈஸ்வரி இருவரையும் சமாளிக்கின்றார். பினனர் மொலினி வீட்டுக்கு வரும் செழியன் மாலினியைப் பார்த்து தெரியாமல் உன்னுடன் பழகிட்டேன். எனக்கு என்னுடைய குடும்பம் தான் முக்கியம்.


நீ இனிமேல் என்னுடைய லைப்ல வராத என்று திட்ட மாலினி போட்டோக்களை காட்டி மிரட்டுகின்றார். நீ மட்டும் பழைய மாதிரி என்கிட்ட பேசல என்றால் இந்த போட்டோக்களை எல்லாம் உன்னோட குடும்பத்திற்கு அனுப்பிடுவேன் என்று சொல்ல செழியன் என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement