• May 18 2024

படம் பார்த்துமே நான் எதுக்கு என்று புரியவே இல்லை- நடிகர் வையாபுரி சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. விமர்சகர்கள் மத்தியில் லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் மிகவும் பிடித்துப் போனதால், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது லியோ. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.148 கோடி வசூலித்து இருந்தது.

 இப்படம் 6 நாட்களில் அந்த சாதனையை எட்டிப்பிடித்து உள்ளது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் 6 நாட்களில் ரூ.440 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக லியோ மாறி உள்ளது.லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்த நிலையில், படம் வெளியான பின்னர் அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.


படத்தில் நடித்து முடிக்கும் போதெல்லாம் எனக்கு என் கதாபாத்திரம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அதே போல படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது கூட எந்தவொரு ஃபீலிங்கும் இல்லை. சோஷியல் மீடியாவில் என்னை வைத்து மீம் வர ஆரம்பித்ததை பார்த்த பின்னர் தான் எனக்கு எவ்ளோ பெரிய ரோலை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார் என நினைத்து சிலிர்த்து விட்டேன் என்றார்.


 வடிவேலு, விவேக்கை வைத்து எல்லாம் ஏகப்பட்ட மீம்கள் வெளியாகி உள்ள நிலையில், தன்னை வைத்து இதுவரை ஒரு மீம் கூட வந்ததில்லை என்றும் முதல் முறையாக இப்படியொரு வீடியோ மீமே வந்ததை பார்த்த நிலையில், சந்தோஷப்பட்டேன் என வையாபுரி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement