பிக்பாஸ் சீசன் 7-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி 18போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமானது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40 நாட்களுக்கு பின் நடக்க வேண்டிய சண்டைகளை, இந்த முறை வீட்டிற்குள் முதல் வாரமே நடந்து கொண்டு இருக்கிறது.
அந்தவகையில் எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் திடீர் திடீர் டுவிஸ்ட் நிகழ்ந்துள்ளது. அதாவது எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அந்தவகையில் வெளியான முதற்கட்ட தகவலின் படி அவர் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரின் இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
Listen News!