• Sep 20 2024

அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மேற்கு வங்கத்தில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகை தான் பல்லவி டே. இவர் கொல்கத்தா நகரில் கர்பா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவருடன் சாக்னிக் சக்ரவர்த்தி என்ற நபரும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பல்லவி டே கண்டறியப்பட்டுள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் பல்லவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவருடன் வசித்த சாக்னிக் சக்ரவர்த்தியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சீரியல் நடிகை உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement