• Apr 27 2024

இயக்குநர் லிங்குசாமியிடம் மன்னிப்புக் கேட்ட பிரபல நடிகர்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குர் லிங்குசாமி.

இவர் தனது இயக்குநர் துறையில் 20வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றார்.2001 ஆண்டு மே 25-ம் தேதி அவரது முதல் படம் ஆனந்தம் திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், மேன்மையையும் சொன்ன திரைப்படம். தமிழகத்து குடும்பங்கள் படத்தை கொண்டாட, படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய இவருக்கு பையா, சண்டக்கோழி ஆகிய படங்கள் பெரும் திருப்பத்தை கொடுத்தது.

தற்போது, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியில் நடிப்பில் தி வாரியார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் புரோமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதில். நடிகர் ராம் பொத்தினேனி பேசினார்.

அப்போது, இப்படத்தின் இயக்குநுர் லிங்குசாமியைப் பற்றி பேச மறந்துவிட்டார். இதற்கு ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில், ராம் பொத்தினேனி, தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்து, லிங்குசாமியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement