• May 06 2024

அந்த ஒரு காரணத்தினால்... நேரில் முகத்தைக் கூட காட்ட முடியவில்லை...நேரலையில் வந்து சமந்தா சொன்ன ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹாலிவுட், பாலிவுட் என பல மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை சமந்தா தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வருகிறார்.பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி பல இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்தார். 


இந்த சமயத்தில்தான் அவருடைய காதல் திருமண வாழ்க்கை சில மாதங்களுக்குள் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வராத சமந்தாவிற்கு அடுத்ததாக உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் தைரியமாக அந்த நோயோடு போராடி அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். 

சினிமாவில் சமந்தா பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் நேரலையில் அடிக்கடி உரையாடி வருவது வழமை. இந்நிலையில் குஷி பட வெற்றியைத் தொடர்ந்து சமந்தா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடி இருக்கின்றார்.


அதில் ரசிகர் ஒருவர் "சமந்தாவின் தோல் பளபளப்பாக இருக்க காரணம் என்ன" எனக் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா "எனது தோல் பளபளப்பாக இல்லை, நோயின் காரணமாக அதிகளவில் ஸ்டீராய்டுகள் எடுத்துக் கொண்டதால், முகத்தின் பளபளப்பு சென்று விட்டது" என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் "இதன் காரணமாக நேரில் முகத்தை காட்டக் கூட முடியவில்லை என்றும், ஃபில்டர்களை பயன்படுத்துவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அவருக்கு தங்களது ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement