தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை லைலா. இவர் தமிழில் ரோஜா வனம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்தி நடித்து அசத்தியிருந்தார்.
முதல் படத்திற்கே நல்ல வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து காமராசு, உனை நினைத்து ,மௌனம் பேசியதே ,போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு பிதாமகன், தில், நந்தா, தீனா பொன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
மேலும் படவாய்ப்புக் குறைந்ததை அடுத்து சினிமாவை விட்டு விலகி திருமண பந்தத்தில் கடந்த 2006ம் ஆண்டு இணைந்து கொண்டார்.இவரது கணவர் பெயர் மேஹ்டி.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.தற்போது நடிகை லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் கார்த்தியின் சர்தார் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!