தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் தற்போது 'துணிவு' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்றது.
இதற்காக கடந்த மாதம் தாய்லாந்து சென்ற அஜித், அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சில நாட்கள் பைக் ரைடிங்கிலும் உல்லாசமாக ஈடுபட்டார். அஜித்தின் உலக சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக இந்த தாய்லாந்து பைக் ட்ரிப் அமைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் முன் அஜித்தின் துணிவு பட ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு வாகனம் மீது இருவர் முகமூடி அணிந்து அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தலையில் நரைமுடி இருந்ததை பார்த்த ரசிகர்கள் உடனே அது அஜித் தான் என நினைத்து அங்கு கூடினர்.
Thala #AjithKumar arrived in Chennai..🔥 Fans welcoming their star in their own style..⭐pic.twitter.com/HW7PVEBO5P
ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. ஏனெனில் அது அஜித் இல்லை, அவரைப்போல் தோற்றம் கொண்ட டூப்பை பயன்படுத்தி எச்.வினோத் காட்சிகளை எடுத்தது தெரியவந்தது. இதனால் அஜித்தை பார்க்க ஆவலோடு அங்கு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிட்டியது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் அஜித். அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் அதிகாலையிலேயே சென்னை விமான நிலையத்தின் முன் குவியத் தொடங்கி விட்டனர்.
This is the reason why Most Of The Police Officers & Army Officers Respect On Him!
The Name Is #Ajithkumar ❤️#Thunivu #ThunivuPonagal2023 pic.twitter.com/UIsQLyZqd0
அப்போது அவர் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்ததும் ரசிகர்கள் உடனே விசிலடித்து கலகலப்பாக ஆரவாரம் செய்ததால் ஏர்போர்ட்டே அதிர்ந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். அதுகுறித்த வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.
Listen News!