• May 10 2024

என்னையா இப்படி பண்ணிடீங்க- ராஷ்மிகாவுக்கு பதிலாக வெளிநாட்டு நடிகைக்கு முன்னுரிமையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13 இல் வெளியான திரைப்படம் புஷ்பா.இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முன்னணி நடிகையான சமந்தா இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஃபான் இந்திய திரைப்படமாக வெளியானது.

இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ளது.இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இன்று வரை பட்டையை கிளப்பி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அல்லு அர்ஜுனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை இமிடேட் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும் போது எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சொல்வதாக இரண்டாம் பாகம் உருவாகின்றது.

இந்நிலையில்,வெளிநாட்டு நடிகை ஹீரோயினாக நடிப்பதால் ராஷ்மிகா ரோலுக்கு 2-ஆம் பாகத்தில் அதிகம் இடம் இருக்காது என கூறப்படுகிறது. மேலும் ஒரு டாப் பாலிவூட் நடிகையை ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட கேட்டு வருகிறார்களாம்.முதல் பாகத்தில் ஊ சொல்றியா பாட்டுக்கு சமந்தா ஆடிய நிலையில் அது மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதன் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement