• May 20 2024

இந்த வாரம் ரெட்காட் வாங்கவுள்ள போட்டியாளர் யார் தெரியுமா?- கமல்ஹாசன் எடுக்கப்போகும் முடிவு என்ன?

stella / 7 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு எந்த வித பஞ்சமும் இல்லாமலே இந்த நிகழ்ச்சி சென்று வருகின்றது.மேலும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகியது.

இதில் விஷ்ணு, பவா செல்லத்துரை, விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பிரதீப், ஜோவிகா, அனன்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த வாரம் மக்களால் வெளியேற்றப்பட்டனர் அனன்யா. அதனைத் தொடர்ந்து நெஞ்சுவலிப்பதாக கூறி பாவா செல்லத்துரை வெளியேறியிருந்தார்.


இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கிறது பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒரே ஒரு நபரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும்படி ஸ்மால் பாஸ் வீட்டினர் கேட்டிருந்தனர்.

இதனாலேயே மோதல் அதிகரித்தது. பின்னர் கேப்டன் விக்ரம் நானே வந்து உங்க வேலையை செய்கிறேன் என கூறி ஸ்ட்ரைகை முடிவுக்கு கொண்டு வந்ததோ அனைவருக்கும் சமைத்தும் பரிமாறினார்.இதுஒரு புறம் இருக்க சண்டை நடந்து கொண்டிருக்கும் போது இடையில் பிரதீப் சரவணனின்வாயை உடைத்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார்.


இது வன்முறை பேச்சு என கூறி பிக் பாஸ் வீட்டனர் கண்டித்தனர். இதை கவனித்த ரசிகர்கள், இந்த வாரம் ரெட் கார்டு பிரதீப் வாங்க போகிறார் என கூறி வருகிறார்கள். கமல் ஹாசன் இதுகுறித்து எந்த முடிவு எடுக்க போகிறார் என எதிர்பார்க்கின்றனர். மேலும் கடந்த வாரம் இப்படிப் பேசியதற்காக விஜய்யை கமல்ஹாசன் கண்டித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement