தமிழ் சினிமாவில், தென்மேற்குப்பருவக்காற்று என்ற படத்தில் சீனுராமசாமி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் விஜய்சேதுபதி.
இவர் தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளதோடு ”மக்களின் செல்வன்” என்றும் அழைக்கப்படுகின்றார்.
அத்தோடு நடிகர் விஜய் சேதுபதி இந்த பெயரை வாங்க அவர் படாத கஷ்டங்கள் இல்லை. நடிகனாக சாதிக்க வேண்டும் என்று இளம் வயதில் இருந்தே நிறைய போராட்டங்களை சந்தித்தவர்.
தற்பொழுது இளம் நடிகர்களுக்கு இவர் ஒரு உதாரணமாகவே இருந்து வருகின்றார்.
இந்நிலையில் விரைவில் அவர் 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.அத்தோடு இந்த படம் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Listen News!