• Apr 16 2026

அது மனோஜோட குழந்தை தான்.. ரோகிணி போட்டுடைத்த உண்மை? கண் கலங்கிய விஜயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி இரண்டாவது தடவையாக பிரக்னண்ட் ஆக செக்கப்புக்கு போன விஷயத்தை மீனா ஸ்ருதியிடம் சொல்ல, ஸ்ருதி ரவியிடம் சொல்ல, ரவி முத்துவிடம் சொல்கின்றார்.

அதன் பின்பு முத்து அண்ணாமலையிடம் சொல்லுகின்றார். அண்ணாமலை நேராக விஜயாவிடம் சொல்ல, விஜயா கோபத்தில் ரோகினியின் கதவை தட்டி உன் வாழ்க்கையில் என்ன நடக்குது? எல்லாமே மர்மமா இருக்குது? நீ ஏற்கனவே எப்போ கருத்தரிச்சா? எனக் கேட்க, ரோகிணி என்ன சொல்வது என்று தெரியாமல் நேரே  போய் சோபாவில் இருந்து அழுகிறார்.


இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைந்து நிற்க, அந்த நேரத்தில் விஜயா எனக்கு பதில் வேணும் என்று ரோகினியிடம் கத்துகிறார். அதற்கு ரோகிணி ஆமாம் நான் ரெண்டாவது தடவ பிரக்னன்ட் ஆவதற்கு தான் ஹாஸ்பிடல் சென்றேன் என்று சொன்னதும் அப்படி என்றால் முதல் தடவை எப்போ பிரக்னண்ட் ஆனா? கல்யாணத்துக்கு முன்பா? கல்யாணத்துக்கு பிறகா? எனக் கேட்க, என்ன ஆண்டி இப்படி எல்லாம் கேக்குறீங்க என ஒப்பாரி வைக்கிறார்.

மேலும் கல்யாணத்துக்கு பிறகு தான் அது மனோஜோட குழந்தை தான், அந்த நேரத்துல தான் அப்பா ஜெயில்ல இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்தது. அதை பற்றி யோசித்து யோசித்து கரு கலைந்து விட்டது என்று சொல்ல, விஜயாவே கண் கலங்கி விடுகின்றார். இதை கேட்டு மனோஜூம் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார் . இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement