• May 20 2024

பிக்பாஸ் வீட்டுக்கு போக முதல் ஜி.பி முத்து நண்பர்களுடன் இணைந்து செய்த வேலை என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா குறித்த எந்தவொரு பின்புலமும் இல்லாமல் டிக்டாக் செயலி மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்ட பிரபலம் தான் ஜி.பி.முத்து.கிராமத்தவராகிய இவர் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான முயற்சியினால் முன்னேறியவர் ஆவார்.

இவர் கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்ய மருத்துவமனையில் இருந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. பின்னர் தனக்கென ஓர் யூடியூப் சேனலை ஆரம்பித்து அதன் மூலம் பல வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருகின்றார். இதன் மூலம் அனைவராலு் கொண்டாடப்படும் போட்டியாளராக வலம் வருகின்றார்.இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக இவர் தன்னை வெளியேற்றுமாறு பல கோரிக்கைகளை வைத்து வருகின்றார்.

இவரை பல முறை சமாதானப்படுத்தியும் அவர் கேட்பதாக தெரியவில்லை.இதனால் இன்றைய தினம் அவர் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.


இவர் பிக்பாஸ் நுழைவதற்கு முன் தனது நண்பர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து நான் பிக்பாஸ் செல்கிறேன் எனக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என கூறியிருக்கிறார்.அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.இருப்பினும் தலைவரே என்ன இப்படி பண்றீங்களே என ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement