• May 13 2024

வசூலில் அள்ளிக் குவிக்கும் ஜெயிலர் திரைப்படம்- நெல்சனுக்கு உடனடியாக போன் போட்ட விஜய்- என்ன சொன்னார் தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் நேற்யை தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

மேலும் மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.பக்கா தலைவர் படமாக எடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் நெல்சனை பாராட்டி வருகின்றனர். அத்தோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.


எனவே ஜெயிலர் திரைப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில் நடிகர் விஜய், நெல்சனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நெல்சன் இதற்கு முன்னர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் நெல்சன் மீதுள்ள நட்பின் காரணமாக அவருக்கு போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறாராம் தளபதி. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


மேலும் ஜெயிலர் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்ததே விஜய் தானாம். பீஸ்ட் ஷூட்டிங்கின் போது, ரஜினிக்கு கதை சொல்லுமாறு நெல்சனுக்கு ஊக்கம் அளித்து அவரை அனுப்பி வைத்ததே விஜய் தானாம். இதை நெல்சனே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி, எப்பவும் காலையில் லேட் ஆக எழுந்திருக்கும் நெல்சனை, ஜெயிலர் படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கிற்கு போன் போட்டு எழுப்பிவிட்டதே தளபதி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement