நடிகர் சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு சிறந்த திரைப்படஇயக்குநர். இவர் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாலாவின் சேது படத்தில் உதவி இயக்குநராகவும் சியான் விக்ரமின் நண்பராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . அவரது நடிப்பாலும் வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவரின் சொத்து மதிப்பு குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
சசிகுமார் 1974ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மதுரையில் பிறந்தவர். கொடைக்கானலில் உள்ள புனித பீட்டர் பள்ளியில் படித்த சசிகுமார் மதுரையில் கல்லூரி படிப்பை முடித்தார். ஆனால், அவருக்குள் இருந்த சினிமாநோக்கம் அவரை பாலாவின் உதவி இயக்குநராக மாற்றியது.சேது படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றி தான் கற்ற கொண்டார்.
"சுப்ரமணியபுரம்" என்னும் திரைப்படத்திலே தனது சினிமா வித்தை அனைத்தையும் காட்டி தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் படுத்தினார். அதன் பிறகு ஈசன், நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்ட, வெற்றிவேல், பலே வெள்ளையத்தேவா, அசுரவதம், பேட்ட, நாடோடிகள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், அயோத்தி என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மீண்டும் சசிகுமாருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. இவர் தற்போது நந்தன், நா நா, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு சொந்த ஊரான மதுரையில் வீடு மற்றும் சொத்துக்கள் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 35 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக சசிகுமார் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு படத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாகவும்தகவல்கிடைத்துள்ளது. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என சினிமாத்துறையில் நிலைத்து நிற்கும் ஒரு சிறந்த படைப்பாளி நடிகர் சசிகுமார்.
Listen News!