• Sep 20 2024

விஜய், சல்மானை அடுத்து முக்கிய நடிகருக்காக காத்திருக்கும் இயக்குநர் லோகேஷ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் புதுமுக இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் என்னும் படத்தை எடுத்தார். அது பிளாகக் பஸ்டர் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக்குவித்தது.இவ்வாறு கமர்ஷியல் ஹிட்டை கொடுத்த இவர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை இயக்கியிருந்தார்.

இவ்வாறு இருக்கையில் இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் கொடுப்பதால் முக்கிய இயக்நர்களில் இவரும் இடம் பிடித்துள்ளார்.

மேலும் தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி இவர் பல்வேறு மொழியின் டாப் நடிகர்களுடன் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் லோகேஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தெலுங்கு நடிகர் ராம் சரண் குறித்து பேசியுள்ளார். மேலும் அவர் "ராம் சரண் உடன் நான் பணியாற்றினால் பெரிய படமாக அது இருக்கும்.

இப்போதைக்கு நானும் அவரும் 2 அல்லது 3 திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறோம், அப்படங்கள் முடிந்தால் நாங்கள் நிச்சயம் இணைவோம் " என கூறியுள்ளளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement