• Apr 28 2024

பிக்பாஸ்-க்கு முன்னாடி மகேஷ்வரி பத்தி பேசுனேனா?".. உண்மைகளை உடைக்கும் மைனா நந்தினி ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஆறாவது சீசனில் இறுதிவரை முன்னேறிய சின்னத்திரை நடிகை மைனா நந்தினி தன்னுடைய பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. ஆரம்பம் முதலே பல டாஸ்க்குகளில் வெற்றி பெற்று சக போட்டியாளர்களுக்கு கடுமையாக டஃப் கொடுத்தவர் மைனா. மேலும் இறுதி வாரத்தில் அசீம், விக்ரமன், ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அப்போது மிட் வீக் எவிக்ஷன் மூலமாக மைனா போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் சோகமடைந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் தன்னுடைய பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து  பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார் மைனா. போட்டியின் போது வீட்டுக்குள் மகேஷ்வரி பேசுகையில் பிக்பாஸ் போட்டிக்கு முன்பாகவே மைனா நந்தினியும் மணிகண்டாவும் தன்னை பற்றி பேசியதாகவும் அதனை நான் அறிந்திருந்தும் பிக்பாஸ் வீட்டுக்குள் அதைப்பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதுபற்றி மைனா நந்தினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது


இதற்கு பதில் அளித்திருந்த மைனா,"பிராக்டிக்கலா யோசிச்சு பாருங்க. இதுவரை எல்லா எபிசோடையும் பாத்திருப்பீங்க. நாங்க இருந்த வரை அவகூட எனக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்ல. அவகிட்ட நான் சண்டை போட்டா கூட, கட்டிப்பிடிச்சு சாரி கேட்ருவேன். யாராவது அழுதாலே எனக்கு கஷ்டம் ஆகிடும். 

மேலும் அப்படிதான் நான் மகேஷ்வரியை பார்த்திருக்கேன். ஆனா, சம்பந்தமே இல்லாம நான் பேசாத விஷயம் இப்படி வந்துடுச்சு. நான் வெளியே வந்த உடன் மீட் பண்ணும்போது 'சாரி மச்சான், எனக்கு வீட்டுக்குள்ள வரும்போதே ப்ரெஷரா இருந்தது. அதுனால தான் அப்படி பண்ணிட்டேன்'-னு சொன்னாங்க. நான் அதை பெருசா எடுத்துக்கவே இல்ல. அவங்க திறமையான பொண்ணு. நெறைய வருஷம் மீடியா-ல இருக்காங்க. அவங்களை பல முறை வியந்து பார்த்திருக்கேன். 

அவளும் யாரையும் காயப்படுத்துனது கிடையாது. இப்படி நடந்தபோது அவ தனிப்பட்ட முறையில ஏதோ பிரெஷர்-ல இருக்கான்னு தோணுச்சு. நானும் அவகிட்ட பேசிட்டேன். அவளும் என்கிட்ட பேசிட்டா. அப்படியே அதை விட்டுட்டோம்" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement