• May 04 2024

சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி- காரணத்தை தெரிவித்த நண்பர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய 7சி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரீநிதி . இருப்பினும் யாரடி நீ மோகினி சீரியலில் ஜனனி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானார்.

இதனைத் தொடர்ந்து இச் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் இவரது நெருங்கிய நண்பர்களாகினார்கள்.கொரோனா லாக்டவுனில் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஏகப்பட்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர் வலிமை திரைப்படத்திற்கு கூறிய விமர்சனத்தால் தல ரசிகர்களால் மிகவும் சர்ச்சையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் மன உழைச்சலுக்கு உள்ளான இவர் சில காலம் சின்னத்திரை பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

தொடர்ந்து சிம்புவின் தீவிர ரசிகையான இவர், அவரை காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ள போவதாக சிம்பு வீட்டுக்கு முன்பு சென்று தர்ணா செய்தது இணையத்தில் வைரலானது. அதே போல தனது தோழியான நட்சத்திரா தவறான ஒருவரைக் காதலிப்பதாகவும் அவரைக் காப்பாற்றுங்கள் என்றும் பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதனால் இவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்தனர். அவரின் அம்மாவும் சமீப காலமாக அவள் நடவடிக்கை எதுவும் சரியில்லை என பேட்டியில் கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சின்ன ரிலாக்ஸ்சேஷனுக்காக இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட பின்பு அவர் மீண்டும் வீடு திரும்புவார் என நண்பர்கள் பகிர்ந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement