• Apr 26 2024

தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்-வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் திருமணம் நேற்று மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.

பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்வேதா.சென்னையில் உள்ள பி.எம்.ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்த ஸ்வேதா ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். அழகான தோற்றத்தினால் பின்னர் இவருக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


அத்தோடு 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா. முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் எட்டியது.


2008-ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக  என்றியானார்.மேலும் இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார்


எதிர்பார்த்த வெற்றியை சினிமா கொடுக்கவில்லை என்றாலும், சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது. அத்தோடு பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.எனினும்  அதன் பின்னர் ’சந்திரலேகா’, தொடரில் நடித்தார். இத்தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார் ஸ்வேதா.


இவ்வாறுஇருக்கையில்  தற்போது ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்துள்ளது. முன்னாள் சன் மியூஸிக் தொகுப்பாளர் மால் மருகாவை தான் இவர் காதலித்து கரம் பிடித்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement