• Apr 15 2026

தந்தையின் இழப்பால் மனமுடைந்த ஆர்த்தி… ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த திரைபிரபலங்கள்.!

shali / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்படங்களில் தன்னிச்சையான நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்த நடிகை ஆர்த்தி, தற்போது ஒரு கடுமையான இழப்பை எதிர்நோக்கியுள்ளார்.


அவருடைய தந்தை திரு. ரவீந்தரன், உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று (அக். 14, 2025) உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 83. அவரது மறைவு, நெருங்கியவர்கள், குடும்பத்தினர், மற்றும் அவரைப் personnel-ஆக அறிந்த பொதுமக்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திரு. ரவீந்தரன் அவர்கள், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தின் ஐ.ஏ.எஸ் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.


இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், திரு. ரவீந்தரன் திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துப் பல்வேறு சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அந்த நிமிடமே அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தியை அறிந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement