• Apr 29 2024

3முறை உணவில் விஷம் வைத்து பொன்னம்பலத்தை கொலை செய்ய சகோதரர் முயற்சி.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். இதனையடுத்து சற்று உடல்நிலை தேறி உள்ள இவர் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சினிமாவில் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் தான் உழைத்த பணத்தை அபகரிப்பதற்காக தனது சகோதரர் விஷம் வைத்து தன்னை கொல்லப் பார்ப்பதாக பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 


அந்தவகையில் தனது மூத்த சகோதரரால் தனது வாழ்வில் நடந்த இன்னல்கள் குறித்து அவர் பேசுகையில் "முத்து என்பவர் 3ஆவது சம்சாரத்துப் பிள்ளை, அவர் சினிமாவில் 40 வருடம் இருந்தார். 40 வருடமாக இருந்தும் ஒரு வீடு வாசல் கட்டல, ஒண்ணும் கட்டல என்ற பொறாமை தான்.

அவர் 3தப்பு பண்ணினாரு. காப்பீட்டுத் திட்டத்தில் எனது மனைவியின் பெயருக்குப் பதிலாக அவரது பெயரை nominee ஆக சேர்த்துக்கிட்டாரு, incomtax ஆபீஸ் இல் என்னுடைய note book கொண்டு போய் கொடுத்தாரு நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதைக் காட்டிறதற்கு, அதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினேன், கணக்குகளை என்னுடைய சகோதரர் தான் பார்த்து வந்ததால் எனக்கு வருமான வரித்துறை குறித்து விளங்கவில்லை, திருமணம் ஆனதால் மனைவியின் பேச்சைக் கேட்கக் கூடாது என மாந்திரீகம் செய்தார்" எனக் கூறினார்.


மேலும் "நான் நடித்த படங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது, எனது உதவியாளரை மிரட்டி 3முறை விஷம் வைத்துக் கொடுத்தார், அந்த விஷத்தால் தொடர்ந்து 3மாசம் வாந்திபேதி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாந்திரீகம் செய்த் பொருளுடன் எனது உடைகளை நிலத்தில் புதைத்தார். 


என்னை வேகமாக கொன்றிருக்கலாம், நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதை அறியவே திட்டம் தீட்டி நடித்தார், எனக்கு சிறுநீராக பிரச்சினை வருவதற்கு முன்பாகவே அவருக்கு சிறுநீராக பிரச்சினை ஏற்பட்டு உயிரிழந்தார், எனது மகனின் பிறந்த நாளில் மதுவில் விஷம் கலந்து கொடுத்தார், ஆனால் அந்த மதுவை எனது நண்பர் குடித்ததால் அவர் உயிரிழந்தார்" எனவும் அந்த பேட்டியில் அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார் பொன்னம்பலம்.

Advertisement

Advertisement

Advertisement