தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கௌதம் கார்த்திக்.அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில்நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.
இவரைப் போல சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முதல் இவர்கள் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.இதனை அடுத்து நேற்று சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக்கின் தந்தை கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் மஞ்சிமா மோகன் குடும்பத்தினர் மணமக்களை ஒரே மேடையில் தோன்றி வாழ்த்திய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. "அழகான குடும்பம்.. லவ் யூ கௌதம் & மஞ்சிமா" என தலைப்பிட்டு மருத்துவர் கவிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதனை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறு பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!