• May 03 2024

அன்பால் தானாய் சேர்ந்த பிரியாணி- ஈகைப் பெருநாளில் நயன்தாரா வீட்டிற்கு பிரியாணி பாசல்களை அனுப்பி வைத்த நண்பர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பணியாற்றும்போதுதான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்கள் லிவிங் டூ கெதராக இருந்தவர்கள் கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். 


இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.திருமணம் முடிந்த கையோடு, அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி லைகாவுக்கு பிடிக்காமல் போக அந்தப் படத்திலிருந்து வெளியேறினார்.


இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா அழுதுகொண்டே சாலையில் நடந்துவரும் சீன் குறித்து பேசினார். மேலும் அந்த சீன் எனக்கு ரொம்பவே பிடித்த சீன் என்றும்; அதற்காக நாங்கள் பயங்கரமாக கஷ்டப்பட்டோம் என்றும் பெருமிதத்துடன் அண்மையில் கூறியிருந்தார்.


இப்படியான நிலையில் இன்றைய தினம் இஸ்லாம் மக்கள் ஈகைப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர். எனவே விக்னேஷ் சிவன் நயன்தாரா வீட்டிற்கும் பிரியாணிகளை அனுப்பி தம்முடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement