• Apr 27 2024

பரத் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதல்-செட் போட்டு எடுக்க முடிவு செய்த தயாரிப்பாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்களில் முக்கியமானவர் தான் பரத். இவர் நடிப்பில் வெளியாக பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இருப்பினும் இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை.

இதனால் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். தற்போது அவர் ஆக்ஷன் 22 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தாய்லாந்தில் சில வருடங்களுக்கு முன் மாணவர்கள் ஒரு குகையில் சிக்கிக்கொண்டு, அதன் பின் பல நாட்கள் மீட்பு பணிகள் நடந்த பிறகு தான் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த சம்பவத்தை வைத்து தான் ஆக்ஷன் 22 படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

உண்மை சமபவம் நடந்த குகையிலேயே இந்த படத்தின் ஷூட்டிங்கையும் நடத்த முடிவெடுத்த படக்குழுவினர் அங்கு சென்று அரசு அனுமதி உடன் ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர்.

ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் வந்து ரகளை செய்து பணம் கொடுத்தால் தான் ஷூட்டிங் நடத்த விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். பணம் கொடுத்தபிறகும் அவர்கள் கார்களை சேதப்படுத்தி கல் எரிந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இனி ஷூட்டிங் அங்கு நடத்தாமல் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் முடிவெடுத்து இருக்கிறாராம்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes
  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement