• Apr 20 2024

சூட்டிங் ஸ்பாட்டில் பிரபல இயக்குநர் ஒருவர் என்னுடன் மோசமாக நடந்து கொண்டார்- காஞ்சனா 3 நடிகையின் பரபரப்பான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் பிக்பாஸ் சீசன் 14 இல் போட்டியாளராகப் பங்குபற்றி ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் நடிகை நிக்கி டம்போலி. தெலுங்கில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்த இவர் அடுத்ததாக திப்பரா மீசம் எனும் தெலுங்கு படத்திலும் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தில் ஓவியா மற்றும் வேதிகாவுடன் இணைந்து நடித்தார்.

இந்நிலையில், நிக்கி டம்போலி சமீபத்தில் பேட்டி ஒன்றில், தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னிடம் ரொம்ப மோசமாக நடந்து கொண்டதாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது தென்னிந்திய இயக்குநர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ரொம்பவே மோசமாக நடந்து கொண்டார். மோசம் என்றால் அந்த மாதிரி நடந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, மற்ற நடனக் கலைஞர்களை நடத்தியது போல தன்னை நடத்தவில்லை என்றும் ரொம்பவே கீழ்த்தரமாக நடத்தினார் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீட்டிற்கு அழுது கொண்டே சென்றேன். என் பெற்றோர்களுக்கும் அந்த நிகழ்வு நன்றாக நினைவில் இருக்கும் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், எந்த இயக்குநர் என்பதை தான் சொல்ல மாட்டேன் என்றும், தற்போது அவருடன் பிரச்சனை இல்லை என்றும் இன்று காலை கூட அவர் தனக்கு மெசேஜ் செய்தார் என்றும் பேசியுள்ளார் நிக்கி. அவரின் பேட்டியை தொடர்ந்து அந்த இயக்குனர் யாரென்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes

Advertisement

Advertisement

Advertisement