தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கணவனால் கைவிடப்பட்டு சொந்த காலில் நிற்க போராடும் பெண்ணின் வாழ்க்கையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. அந்த வகையில் இந்த சீரியல் பெண் தலைமைத்துவத்தில் வாழும் குடும்பங்களுக்கு எடுத்துக் காட்டாகும்.
கோபி பாக்கியாவுக்கு எதிராக பல தில்லாலங்கடி வேலைகளை செய்து ஒரு மாதிரியாக தான் நினைத்த ராதிகாவைத் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டார். கோபிக்கு தான் திருமணம் என்று தெரியாமல் ராதிகா சமைக்கும் ஆடர் எடுத்து சமைத்து வந்தார். பின்பு கோபியின் அப்பா திருமண மண்டபத்துக்கு வந்து ரகளை எல்லாம் செய்தார்.
ஆனால் கோபி அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ராதிகாவைத் தான் திருமணம் செய்து முடிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார். அதே போல பாக்கியாவும் இதை எல்லாம் பொருட்படுத்தாது சமையல் வேலையில் ஈடுபட்டு இருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஈஸ்வரி இனியா மற்றும் ஜெனிக்கு கோபியின் அப்பா அனைத்து உண்மையையும் சொல்லி விட்டார். இதனால் அவர்கள் மூவரும் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஓடி வருகின்றனர். ஆனால் கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!