சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “முறை மாப்பிள்ளை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகித் தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். அறிமுக படத்தை தொடர்ந்து தனது திரையுலக வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும் தொடர்ந்து ‘பிரியம், இயற்கை, பாண்டவர் பூமி, கங்கா கௌரி’ எனப் பல படங்களில் நடித்திருந்தார்.
எனினும் இப்படங்கள் யாவற்றையும் விட தல அஜித் உடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்த ‘என்னை அறிந்தால்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்ததோடு அஜித் ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் அவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்துள்ளார். படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக உலகம் முழுவதும் 1200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
ஜுலை 1ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர. அத்தோடு அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் இருவரும் முதன்முறையாக ஜோடி அமைத்து நடித்துள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 12.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.
பிற செய்திகள்
- ஆடையை சிறிதாக்கி அங்கத்தை காட்டும் ஸ்ருதி இப்படியா-பரபரப்பு காரணங்களை வெளியிடும் பயில்வான்..!
- லீனா மணிமேகலையின் ''காளி'' பட சர்ச்சை - இணையம் எடுத்த அதிரடி..!
- பிரபல நடிகரின் யூடியூப் சேனலை வாங்கும் உதயநிதி? வெளியானது தகவல்..!
- “நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை…அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது..” பிரபல நடிகை பகீர் பேட்டி..!
- அட அனிருத்திற்கு அக்கா இருக்கிறாங்களா..? அடேங்கப்பா..என்ன ஒரு அழகு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!