• Oct 07 2024

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு அதிரடியாக ஒத்திவைப்பு! பின்னணி என்ன தெரியுமா?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் தனுஷ் இயக்குனராகவும் பாடகராகவும் பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன்  திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் 100 கோடிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. இது தனுஷுக்கு 50வது படமாக காணப்படுகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனான தனுஷ் தற்போது அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் காதலிக்கு தான் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்களுடைய காதல் வாழ்க்கை நிலைக்கவில்லை. கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர்.

எனினும் அவர்களுக்கு இடையிலான விரிசல் இன்னும் கூடியதே தவிர குறையவில்லை. ஆனாலும் அவர்களுடைய பிள்ளைகளின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பெற்றோராக ஒன்று சேர்ந்து போவதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களுடைய வழக்கை  அக்டோபர் 19ஆம் தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து மனு செய்திருந்த நிலையில், வழக்கில் இருவரும் ஆஜராகாத சந்தர்ப்பத்திலேயே சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. தற்போது இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement