• Apr 01 2025

மாலைகளை எடுத்து செல்லும் முத்து! வழிமறித்து வம்பிழுக்கும் ரவுடிகள்! சந்தோசத்தில் குதிக்கும் மீனா! Siragadikka Aasai-Promo

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும்  "சிறகடிக்க ஆசை"  சீரியலின் நாளைக்கான PROMO வெளியாகியது. அதில் என்ன நடைபெறுகிறது என பார்ப்போம் வாங்க.


கஷ்டப்பட்டு 500 மாலைகளையும் கட்டி முடித்த பின்னர் முத்து அனைத்து மாலைகளையும் வண்டியில் ஏத்தி கல்யாண மண்டபத்தில் கொடுப்பதற்கு தயாராகுகிறார். மீனாவை பார்த்து 'சரி மீனா நான் இதெல்லாம் போய் குடுத்துட்டு வாறன் ' என்று சொல்கிறார் அதட்கு மீனா 'என்னங்க என்ன விட்டுட்டு போறீங்க நானும் வரேன் 'அப்பிடின்னு சொல்ராங்க  அதற்கு  முத்து 'ஆமா கஷ்டப்பட்டு கட்டினது நீ, உன்ன விட்டுட்டு போனா நல்லா இருக்காது அதனால நீயும் வா ' என்று மீனாவையும் அழைத்து செல்கிறார்.


அப்படி போகும் வழியில்  நாலு ரௌடிகள் வழிமறித்து வம்பிழுக்கின்றனர் .இவர்கள் சிட்டியின் அடியாட்கள் ஆகும் . முத்து மிகவும் பொறுமையாக கூறுகிறார் 'இஞ்ச பாருங்க நான் சண்டை போடுற மூட்ல இல்ல அவசரமா ஒரு இடத்துக்கு போகணும் ' அப்படினு சொல்லி பார்க்கிறார் அவர்கள் கேட்பது போல் இல்லை. 


வேறு வலி இன்றி முத்து அவர்களுடன் சண்டை போடுகிறார் ரௌடிகள் விட்டால் போதும் என்டு ஓடிவிட்டனர் பின் முத்து சரியான நேரத்துக்கு மாலைகளை மண்டபத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறார் . பயங்கர சந்தோஷமடைந்த கட்சி தலைவர் பேசியதை விட அதிக பணம் கொடுக்கிறார் . மீனா முத்துவை பார்த்து 'நான் கூட ரொம்ப பயந்துட்டேங்க நாம கஷ்டப்பட்தெல்லாம் வீனா போயிருமானு  ' அதுக்கு முத்து மீனாவை  பார்த்து கஷ்டப்பட்டு நியாயமா உழைச்சது என்னைக்குமே வீண் போகாது மீனா அப்டினு சொல்ல அத கேட்ட மீனா சிரிப்பதோடு இந்த PROMO  நிறைவடைகின்றது 

Advertisement

Advertisement