• May 19 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு வி . ப்ரியாவின் இயக்கத்தில் வெளி வந்த கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் ஒரு நடிகை மட்டும் இன்றி பின்னனணி பாடகியும் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவர்

இதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம்,ஆயிரத்தில் ஒருவன்,மங்காத்தா என பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்.

மேலும் இவர் கைவசம் தற்போது பிசாசு 2, வட்டம், அணல்மேல பனித்துளி, கா, மாளிகை, நோ என்ட்ரி என ஆறு படங்களை வைத்துள்ளார்.

இதில் அதிகம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்திற்காக தான்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது தனது சம்பளத்தை 1.50 கோடியாக உயர்த்தியுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே ரூ. 1 கோடி வரை வாங்கி வந்த ஆண்ட்ரியா, இனி நடிக்கவிருக்கும் படங்களுக்கு ரூ. 1.50 கோடி வாங்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement