• May 20 2024

கூல் சுரேஷைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினியை அசிங்கப்படுத்திய இயக்குநர் பேரரசு- இது தான் விஷயமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு திரைப்படத்தின் ஆடியோ இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஒருவருக்கு மாலை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத தொகுப்பாளினி ஐஸ்வர்யா உடனே அந்த மாலையை கோபத்துடன் எடுத்து கீழே போட்டு கூல் சுரேஷை கடுமையாக முறைத்தார். 


கூல் சுரேஷைத் சார்பாக மன்சூர் அலிகான் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.அதேபோல் கூல் சுரேஷும், அந்தப் பெண்ணும் நானும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே பேசினோம் என கூற அதற்கு அந்தப் பெண்ணோ நான் ஒருவார்த்தைக்கூட உங்களிடம் பேசவில்லையே என சொல்ல கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார். 

அதனைத் தொடர்ந்து கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டும், நடந்த சம்பவம் குறித்தும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், " சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதம் நடந்துவிட்டது. அந்த தொகுப்பாளினிக்கு மாலை போட்டேன். ஆனால் பெண்ணுக்கு மாலை போடக்கூடாதாம். கலகலப்பாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுவேன். அப்படித்தான் விளையாட்டுத்தனமாக செய்தேன்.விபரீதமாகிவிட்டது. எல்லோரும் மன்னித்துவிடுங்கள்" என்றார். 

இந்நிலையில் ஒரு புதிய படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியையும் ஐஸ்வர்யாவே தொகுத்து வழங்கினார். அப்போது ஒருசிலர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா அவர்களுக்கு மைக்கை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்தார். அதனையடுத்து இயக்குநர் பேரரசு பேசினார். அப்போது மைக் சரியாக இல்லை. உடனே அந்த தொகுப்பாளினியை பார்த்து அவர் மைக்கை சரி செய்யும்படி சைகை காண்பித்துவிட்டு'எல்லோருக்கும் பண்ண நான் மட்டும் இளிச்சவாயனா'என கூறினார்.


 அதற்கு ஒருபக்கம் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. மேலும் தொகுப்பாளினியிடம் எப்படி பேசுவது என்றுகூடவா பேரரசுக்கு தெரியாது என ரசிகர்கள் கேள்வி கேட்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement