• Apr 24 2024

உண்மையை கண்டு பிடித்து சவாலில் ஜெயித்த தனம்- மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு என்ன- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கன்றது. அந்த வகையில் சகோதர பாசத்தை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்

நான்கு சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வாழும் போது அடிக்கடி பிரச்சினைகள் வந்தாலும் குடும்பத்தை விட்டு பிரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக மீனாவின் அப்பா கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் உடைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கதிர் நடத்தும் சாப்பாட்டுக்கடையை இப்போது தனம் தலமையில் மீனா ,ஐஸ்வர்யா, முல்லை ஆகியோரே நடத்தி வருகின்றனர்.இந்த சமயத்தில் சாப்பாட்டுக்குள் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்பட்டதால் கடையை மூடி சீல் வைத்து விட்டனர்.இதனால் கோபத்தில் மூர்த்தி கத்த தனம் உண்மையை கண்டு பிடிப்பேன் என்று சபதம் விட்டார்.

அதன்படி சாப்பாட்டுக்குள் கரப்பான் பூச்சி எப்படி வந்தது என்பதனை தனம் கண்டு பிடித்து விட்டதோடு கடையை மீண்டும் திறந்து விட்டார்.இதனால்  மூர்த்தி என்ன முடிவு எடுக்கப் பேபாகின்றார் என்பது தெரியவில்லை. இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement