• May 04 2024

அட்ஜெஸ்ட்மன்ட் போய்ட்டு நைட்ல எப்படி தூங்கிறீங்க- நடிகை ஷாமிலாவின் மனம் திறந்த பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ஷகிலா. இவர் பிரபல சேனல் மூலம் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகையான ஷாமிலாவை நேர் காணல் கண்டுள்ளார்.

அந்த வகையில் ஷாமிலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னவென்றால் அட்ஜெஸ்ட்மன்ட் என்ற ஒரு பிரச்சினை சினிமாவில இருக்கு அது உங்களுக்கு இருந்ததா என்று கேட்கப்பட்டது. அப்போது பதில் கூறிய ஷாமிலா நான் சினிமாவுக்கு அப்பா கூட தான் ஆரம்பத்தில நடிக்க வந்தேன். அதனால அப்படி ஒன்றும் இல்லை.

அதுக்குப் பிறகு அப்பா இல்லாம தனியாக சூட்டிங் போகும் போது தான் இந்த பிரச்சினை வந்தது. ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ளல. யார் அதை கேட்டாலும் இல்லை என்று தான் சொல்லுவேன். என்னோட பிரண்ட்ஸ் கிட்ட கேட்டிருக்கிறேன். இப்படி பண்ணிட்டு நைட்ல எப்படி நிம்மதியா துாங்கிறீங்க என்று கேட்டிருக்கிறேன்.அதே மாதிரி சில பொண்ணுங்கள இந்த மாதிரி விசயத்தில இருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்று கூறினார்.

அத்தோடு உங்கள் பாங்க் பலன்ஸ் எவ்வளவு என்று கேட்டபோது ஒரு வங்கியில எவ்வளவு வைக்க வேண்டுமோ அது இருக்கு என்றும் தன்னிடம் கார் இல்லை என்றும் கூறினார். அத்தோடு கார் இல்லாததற்கு காரணம் சினிமாக்காரன்களே கார் அனுப்பிறாங்க எதற்காக கார் வாங்கி வீண் பெற்றோல் சிலவு வைக்கணும் என்று கூறினார்.

அத்தோடு வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் என்ன என்றால் நான் நடிப்பை விட்டுட்டு ஹொட்டல் ஒன்றிற்கு வேலைக்கு போனேன். ஆனால் அங்கு இருக்கிற றுால்ஸ் எல்லாம் பார்த்து திரும்ப வந்திட்டேன். நடிகையாக இருக்கிறவங்க வேற வேலைக்கு போக முடியாது என்று கூறினார்.

அத்தோடு குடும்பப் பெண்ணாக இருப்பது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் நான் போதைப் பொருள் பாவிக்கிறேன் என்பதே என்பதைப் பற்றி வெளியாகிய தவறான கருத்து என்றும் கூறினார். அத்தோடு சின்ன குழந்தைகளை சீரழிக்கிறவங்கள என்ன செய்யனும் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய ஷாமிலா இப்படிப் பண்றவங்கள சும்மா விடக்கூடாது அவமானப்படுத்தி சாகடிக்கணும் என்று கூறினார் . அத்தோடு நான் படிக்கும் போது எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதாவது பாடசாலையில் எனது உடலை ஒருவர் தவறாக தொட்டார். இதனை நான் அதிபரிடம் போய் சொன்னேன். ஆனால் உடனே எனது ஆடையை பற்றி தான் தவறாகப் பேசினார்கள். அப்படி செய்தவனை எதுவும் சொல்லல என்று கூறினார்.

Charmila @ Grandma Movie Trailer Launch Stills

அதுக்குப் பிறகு பிக்பாஸ் போற ஐடியா இருக்கா என்று கேட்ட போது கண்டிப்பாக இல்லை. என்னோட மகனை பார்த்துக் கொள்ள வேண்டும் அதனால போகமாட்டேன். அத்தோடு என்னோட முதல் சம்பளம் 15 ஆயிரம் என்றும் உயர்ந்த சம்பளம் 6லட்சம் என்றும் கூறினார்.

மேலும் கடவுள் வந்து என்ன வரம் வேணும் என்று கேட்டால் நான் எங்க அப்பாவைத் தான் கேட்பேன். அவர் வந்தால் எல்லாமே மாறிடும். அவர் உயிரோட வந்தால் நான் அப்பாகிட்ட மன்னிப்புக் கேட்கணும் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/fLflgyaXVvs

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement