வாலி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து விஜய் நடிப்பில் வெளியாக குஷி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறியப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து கோலிவூட் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.
இவர் நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் சூர்யா நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது. இவரது சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் ரசிகர்களிடையே மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது
சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஹீரோவாகியுள்ள சூர்யா தற்போது ஆஸ்கர் அக்கடமியின் மோஷன் பிக்சர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் குழுவில் உறுப்பினராக சேர ஆஸ்கர் அக்கடமி அழைப்பு அனுப்பிய 357 சினிமா பிரபலங்களில் சூர்யாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜோதிகாவின் அக்காவும் நடிகையுமான நக்மா சூர்யாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஆஸ்கர் அக்கடமியின் அழைப்பை பெற்றுள்ள முதல் தென்னிந்திய நடிகர் என்று குறிப்பிட்டு சூர்யாவின் அழகான மற்றும் ஸ்டைலான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்யையின் முகத்தை முதுகில் பச்சை குத்திய தீவிர ரசிகை- உடனே கட்டிப்பிடித்து சமாதானம் செய்த நடிகர்
- எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்குதுன்னு கேட்ட மீனா-கண் கலங்கிய பிரபலம்
- எனக்கு டான்ஸ் ஆடுவது டச் விட்டு போயிட்டு- ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலைக் கூறிய பிரபுதேவா
- பாவம் நம்ம ஸ்ருதி ஹாசன்- மோசமான பிரச்சினையால் அவதிப்படுறாங்க
- கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைந்துள்ள யானை திரைப்படத்தின் திரைவிமர்சனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!